செய்திகள் :

Drishyam 3: பூஜையுடன் `த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பு தொடங்கியது; உடனடியாக டெல்லிக்கு விரைந்த மோகன் லால்!

post image

Aமிகவும் எதிர்பார்க்கப்பட்ட `த்ரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்று இப்படத்தின் பூஜை கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் நடைபெற்றது.

Drishyam 3 - Mohanlal
Drishyam 3 - Mohanlal

பூஜையை முடித்த கையோடு டெல்லிக்கு விரைகிறார் மோகன் லால். நாளை நடைபெறவுள்ள 71வது தேசிய விருது விழாவில் அவர் தாதா சாகெப் பால்கே விருது பெறவிருக்கிறார்.

பூஜையை முடித்தக் கையோடு இந்த மூன்றாம் பாகம், ஜார்ஜ் குட்டியின் வாழ்கையின் எப்படியான பக்கங்களைப் புரட்டும் என்பது குறித்து அப்டேட் தந்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

அவர் பேசுகையில், ``இதற்கு முந்தைய இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டிக்கும், இன்ஸ்பெக்டர் கீதாவுக்கும் இடையேதான் கதை பயணித்தது.

இந்த பாகம், 4, 5 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்ற விஷயங்களையும் காட்சிப்படுத்தும்

இந்தப் படத்தின் படமாக்கும் பணி எப்போது முடியும் என்பது நமக்குத் தெரியவில்லை. அது முடிந்து மீதமுள்ள பணிகள் முடிவடைந்தவுடன், எல்லாவற்றையும் தீர்மானிப்பது தயாரிப்பாளர்தான்.

நான் `த்ரிஷ்யம்' படத்தை ஒரு த்ரில்லராக ஒருபோதும் கருதவில்லை. அதை நான் ஒரு ஃபேமிலி டிராமாவாகவே கருதுகிறேன். அது இரண்டு குடும்பங்களின் கதை.

இந்த பாகம் ஜார்ஜ்குட்டி குடும்பத்தின் உணர்ச்சிப் போராட்டங்கள், பின்விளைவுகள் போன்ற அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியது.

Drishyam 3 - Mohanlal
Drishyam 3 - Mohanlal

தாதா சாகெப் பால்கே விருது பெறும் மோகன் லாலை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் சினிமாவை தாண்டி இந்த சமூகத்திற்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

இந்த விருதைப் பெறுவதற்கு அனைத்து வழிகளிலும் அவர் தகுதியானவர்." எனப் பேசியிருக்கிறார்.

படத்தின் பூஜை புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் மோகன் லால், ``ஜார்ஜ்குட்டியின் உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறோம். இன்று பூஜையுடன் `த்ரிஷ்யம் 3' படம் தொடங்கியது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி

நாயகியை மையப்படுத்திய படம் இதுவரை இப்படியொரு வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்ததில்லையே என திரையுலகை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது ‘லோகா’ (Lokah Chapter 1: Chandra). படத்தில் நீலியாக நாயகி கல்யாணி ப... மேலும் பார்க்க

Lokah: "போலி செய்திகளைப் புறக்கணிக்கவும்" - ஓடிடி வெளியீடு குறித்து தயாரிப்பாளர் துல்கர் விளக்கம்

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியது. 'லியோ' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்ஸ் மாஸ்டர் சாண்ட... மேலும் பார்க்க

"பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்தபோது நம்ப முடியவில்லை" - மோகன்லால் நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து கொச்சிக்கு வந்தார் மோகன்லால். தனக்கு விருது அறிவிக்கப... மேலும் பார்க்க

Dadasaheb Phalke Award: "சினிமாவை சுவாசிக்கும் உண்மையான கலைஞன்" - மோகன்லாலை வாழ்த்திய மம்மூட்டி

இந்திய சினிமா துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்திருக்கிறது.தாதாசாகேப் பால்கே:இந்தியாவின... மேலும் பார்க்க

"ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு இது தகுதியான அங்கீகாரம்"- மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன்

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

Mohanlal: நடிகர் மோகன்லாலுக்கு `தாதாசாகேப் பால்கே விருது' மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்ட... மேலும் பார்க்க