செய்திகள் :

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.... அபிஷேக் சர்மாவுக்கு அஸ்வின் பாராட்டு!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடியதை அவரது வருகை எனக் கூறமாட்டேன். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது அதிரடி ஆட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே. அவர் இப்போதுதான் ஆரம்பித்துள்ளார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் கிரிக்கெட் உலகை கலக்க காத்திருக்கிறார். யுவராஜ் சிங்கைப் போன்று அபிஷேக் சர்மாவிடம் அதிக அளவிலான திறமைகள் இருக்கின்றன.

வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மாவால் எளிதில் மாற முடியும். இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் சகாப்தத்தை அபிஷேக் சர்மா தொடர்வதாக நினைக்கிறேன். அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான திறமைகள் நிறைந்த வீரர் என்றார்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 173 ரன்களுடன் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Former Indian cricketer Ravichandran Ashwin has praised Abhishek Sharma for his impressive performance against Pakistan.

இதையும் படிக்க: ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: இந்திய வீராங்கனை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவால்கள் நிறைந்திருக்கும் எனவும், எங்களது இலக்கு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எனவும் இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒ... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை இனி ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க

அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!

ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மா, திலக் வர்மாவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்கள் திரட்டியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பவர்-பிளே ஓவர்களில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.இ... மேலும் பார்க்க