செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக நிறைவு!

post image

மும்பை: அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில், இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக முடிவடைந்தன.

அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, பணம் அனுப்பும் முறையில் மந்தநிலை வெகுவாக தூண்டும். அதே வேளையில், அமெரிக்காவிற்கான சேவை ஏற்றுமதி வெகுவாக சரிவடையும்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.41 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.82-ஐ தொட்ட நிலையில், முடிவில் 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக முடிவடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று (திங்கட்கிழமை) 12 காசுகள் குறைந்து ரூ88.28 ஆக இருந்தது.

இதையும் படிக்க: வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

The rupee depreciated 47 paise to hit an all-time low of 88.75 against the US dollar on Tuesday, amid sustained outflow of foreign funds on the back of a steep hike in US H-1B visa fee.

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2 முறை விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவக... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று ... மேலும் பார்க்க

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது. வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2... மேலும் பார்க்க

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது, மே மாதத்தில் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து, ஆகஸ்ட் மாதம் 9.648 கோடி அமெரிக்க டாலராக, அதாவது 58 சதவிகிதம்... மேலும் பார்க்க