செய்திகள் :

இரவில் சென்னை, 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அடுத்த மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோன்று, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை: அமைச்சர் சேகர்பாபு

Rain chance for 29 districts of tamilnadu

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை: அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு மார்க்கெட்டில் செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.மேலும், வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அத... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு தொடர்ந்து 8வது முறை சிறந்த உடலுறுப்பு தானத்துக்கான விருது!

சென்னை: தமிழகம் தொடர்ந்து 8 முறை சிறந்த உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் உடல் உறுப்பு தான... மேலும் பார்க்க

வெடிகுண்டு எச்சரிக்கை! சென்னை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் சோதனை!

சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதுமே சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரு... மேலும் பார்க்க

பெண்கள் இரவில் தனித்துப் பயணமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை என்ன?

பெண்கள் ஆட்டோ/டாக்ஸியில் தனியாக குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும்போது அதிக சவால்களை எதிர்கொள்வதுடன் அதிக அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டி... மேலும் பார்க்க

செப்.25 முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் செப். 25 முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (22-09-2025) காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். அங்கு, புதிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று(செப். 23) சந்திக்கிறார்.நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச்... மேலும் பார்க்க