செய்திகள் :

சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை

post image

உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. தலைவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மனிதநேயமானது இப்போது கடுமையான இடைஞ்சல் மற்றும் சொல்லொணாத் துயரம் நிறைந்ததொரு காலக்கட்டத்துக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. தலைவர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருப்பதாவது: "80 ஆண்டுகளுக்கு முன், போர்களால் வறுத்தெடுக்கப்படதொரு உலகத்தில், தலைவர்களானவர்கள் ஒரு விருப்பத்தின்பால் முடிவெடுத்தார்கள். அதன்கீழ், வீண் சச்சரவுக்கு பதிலாக ஒத்துழைப்பு; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பதில் சட்டம் நிலைத்தன்மை; சண்டைக்கு பதில் அமைதி.

அந்தத் தலைவர்களின் விருப்பதாலேயே ஐக்கிய நாடுகள் அவை என்ற ஒன்று பிறக்க வழிவகுக்கப்பட்டது. மனிதநேயம் நீடித்திருக்க தேவையான செயல்திட்டமாக ஐ. நா. உருவாக்கப்பட்டது.

வெறுமனே ஆலோசனை நடத்துவதற்காகக் கூடும் அரங்கம் அல்ல ஐ. நா., அதிலினும் மேலானது. இதுவொரு, அமைதியை நிலைநாட்டும், வலியுறுத்தும் சக்தி.

சர்வதேச சட்டத்தின் பாதுகாவலன். மேம்பாட்டுக்கான தூண்டுகோள், இன்னல்களில் அல்லல்படும் மக்களுக்கான உயிர்நாடி. மனித உரிமைகளுக்கான ஒளி கோபுரம். உறுப்பு நாடுகளின் முடிவுகளை செயல் வடிவமாக்கும் மையம் இது” என்றார்.

UN chief warns world leaders that humanity has entered 'an age of reckless disruption and relentless human suffering'

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில்,... மேலும் பார்க்க

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட... மேலும் பார்க்க

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்... மேலும் பார்க்க

காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது. இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ... மேலும் பார்க்க

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற ம... மேலும் பார்க்க