கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!
பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில், ஹமாஸின் கடற்படைத் துணைத் தளபதி இயாத் அபு யூசெஃப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ELIMINATED: The Deputy Commander of Hamas’ Naval Police, Iyad Abu Yusuf
— Israel Defense Forces (@IDF) September 22, 2025
In a joint cooperation, the Israeli Navy provided the intelligence guidance for the Israeli Air Force in a precision strike in the Central Camps.
Yusuf took part in Hamas’ invasion of Israel on October… pic.twitter.com/Qy5FJxpcRQ
இதுபற்றி, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இயாத் அபு யூசெஃப் பங்கேற்றதாகவும், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இஸ்ரேலின் ஆபரேஷன் கிதியோன்ஸ் சாரியட்ஸ் 2 துவங்கப்பட்டது முதல், ஹமாஸின் கடற்படை காவலர்களையும் கட்டமைப்புகளையும் அழிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, இஸ்ரேல் கடற்படை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!