செய்திகள் :

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

post image

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில், ஹமாஸின் கடற்படைத் துணைத் தளபதி இயாத் அபு யூசெஃப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இயாத் அபு யூசெஃப் பங்கேற்றதாகவும், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இஸ்ரேலின் ஆபரேஷன் கிதியோன்ஸ் சாரியட்ஸ் 2 துவங்கப்பட்டது முதல், ஹமாஸின் கடற்படை காவலர்களையும் கட்டமைப்புகளையும் அழிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, இஸ்ரேல் கடற்படை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

The Israeli military has announced that it has killed the deputy naval commander of the Palestinian militant group Hamas.

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்... மேலும் பார்க்க

காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது. இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ... மேலும் பார்க்க

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற ம... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது.நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில... மேலும் பார்க்க

பாக். பிரதமர் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் டிரம்ப்!

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சப... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில... மேலும் பார்க்க