செய்திகள் :

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

post image

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகளின் கீழ், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த இந்தர்ஜீத் சிங் கோசலை (வயது 36), கனடா காவல் துறையினர் கடந்த செப். 19 ஆம் தேதி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கோசலுடன் குற்றம்சாட்டப்பட்ட டொரண்டோ நகரத்தைச் சேர்ந்த அர்மான் சிங் (23) மற்றும் ஜக்தீப் சிங் (41) ஆகியோரும் ஒஷாவா நீதிமன்றத்தில், இன்று (செப். 22) ஆஜர்படுத்தப்பட்டனர்.

காலிஸ்தான் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, பதவியேற்ற கோசல், காலிஸ்தானுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு பிரசாரம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தர்ஜீத் சிங் கோசல் “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” எனும் பிரிவிணைவாத அமைப்பிலும் உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார்.

இத்துடன், அவர் செயல்பட்ட சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவர் குர்பட்வாந்த் சிங் பன்னூன், இந்திய அரசினால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

Khalistan leader Inderjeet Singh Ghosal has been arrested by police in Canada for allegedly using a firearm in an unsafe manner.

காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது. இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது.நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில... மேலும் பார்க்க

பாக். பிரதமர் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் டிரம்ப்!

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சப... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில... மேலும் பார்க்க

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருத... மேலும் பார்க்க

நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்று... மேலும் பார்க்க