செய்திகள் :

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

post image

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது.

சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீட்பு மையம், ஒரு இந்து கோவில், ஒரு மசூதி, ஒரு புத்த ஆலயம், ஒரு தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.

அதை தவிர விலங்குகள் சுதந்திரமாக இங்கு நடமாடுகின்றன, போட்டி தேர்வுகள் இல்லாமல் ஏழாம் வகுப்பு வரை இயங்கும் ஒரு பள்ளி இருக்கிறது, இயற்கையை படிக்கும் இடம் இருக்கிறது, பெரும்பாலான ஆன்மிக கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் ஒரு நூலகம் இருக்கிறது.

தியோசாபிகல் சொசைட்டி

சென்னையில் தனித்துவம் பெற்று இருக்கும் இந்த இடத்திற்கு ஒரு தனித்துவமான வரவேற்பு இருந்து வந்தது. இது தனது 150-வது வருடத்தை எட்டிய நிலையில் அமைதியான முறையில் ஆரவாரம் இன்றி அதனை கொண்டாடியிருக்கிறது.

தியோசாபிகல் சொசைட்டி, 1875 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஹெலினா பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஓல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் சென்னையில் நிறுவப்பட்டு இருக்கிறது. மதம், தத்துவம், அறிவியல் படிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக இது கொண்டிருக்கிறது.

தியோசாபிகல் சொசைட்டி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அர்த்தம் ”கடவுளின் ஞானம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இடம் பொது மக்களுக்காக முன்பு திறக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் அங்கு குப்பையை கொட்டுதல், 200 ஆண்டு கால பழமையான மரங்களில் பெயர்களை செதுக்குதல் போன்ற செயல்களால் அங்கு நுழைவு தடை செய்யப்பட்டு இருப்பதாக அதன் நிறுவனர் கூறியிருக்கிறார்.

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்

இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

VGP மரைன் கிங்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு கண்காட்சி

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது. இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மால... மேலும் பார்க்க

H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக்குப் போராடும் சோகம்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகில் இருக்கும் சிய்யாவரம் என்ற கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவ... மேலும் பார்க்க

மும்பை தாண்டியா நடனம்: 'பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிப்போம்' - VHPயின் கட்டுப்பாடுகளால் சர்ச்சை

நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நா... மேலும் பார்க்க