செய்திகள் :

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

post image

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட்ஸ்ஆப் குழு செய்திகளின் நோடிபிகேஷன்களை தவிர்க்கும் வகையிலான புதிய அம்சமும் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

நோடிபிகேஷன்கள் அதிகமாகாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலானோர் உள்ள குழுக்களில் அடிக்கடி வரும் நோடிபிகேஷன்களால் கவனச் சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த அம்சங்களை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கிறது.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், குழுவாகவும் பல்வேறு நபர்கள் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

எனினும் அதிக எண்ணிக்கையிலானோர் உள்ள குழுக்களில் அனைவரையும் (@everyone) குறிப்பிட்டு தகவல்களைப் பகிர்ந்துகொள்வதால் அடிக்கடி நோடிபிகேஷன்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

குழுவில் உள்ள யாராகினும் அனைவரையும் எனக் குறிப்பிட்டு தகவல்களைப் பகிர்ந்தால் ஒவ்வொரு முறையும் நோடிபிகேஷனாக வரும்.

பெரும்பாலும் முக்கியமான தகவல்களுக்கு மட்டுமே அனைவரையும் எனக் குறிப்பிட்டு குழுக்களில் செய்திகள் பகிரப்பட்டாலும், சில நேரங்களில் இது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழுக்களின் நோக்கமும் சீர்கெடுகிறது.

அதோடு அடிக்கடி வரும் நோடிபிகேஷன்களால் அதிக கவனச் சிதறல் ஏற்படுவதால், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சலிப்புத்தன்மையும் ஏற்பட்டுவிடுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில், வாட்ஸ்ஆப் குழுவில், அனைவரையும் எனக் குறிப்பிட்டு பகிரப்படும் தகவல்களுக்கான நோடிபிகேஷன்களில் கட்டுப்பாடுகளை விதித்து, நோடிபிகேஷன் வராத வகையில் செய்துகொள்ளலாம். சிலர் பதிவிடும் தகவல்களுக்கு மட்டும் நோடிபிகேஷன் வரும் வகையில் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதனைத் தேர்வு செய்துகொள்ள செட்டிங் தேர்வு செய்து அதில் மியூட், மியூட் எவ்ரிஒன் என எது வேண்டுமோ அதனைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

எதற்கு நோடிபிகேஷன்கள் வர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு தேர்வு செய்துகொள்ளலாம். இதன்மூலம் முக்கியமான நபர்களை மட்டும் குழுவில் தேர்வு செய்துகொண்டு, அதன் நோடிபிகேஷன்களுக்கு மட்டும் பதிலளிக்கலாம். வரும் வாரங்களில் நடக்கும் அப்டேட்களில் இந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்க |விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

WhatsApp Testing Option to Turn Off @Everyone Notifications in Busy Chats Without Missing Important Messages

ஒரே நாளில் 2 முறை விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவக... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று ... மேலும் பார்க்க

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது. வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2... மேலும் பார்க்க

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது, மே மாதத்தில் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து, ஆகஸ்ட் மாதம் 9.648 கோடி அமெரிக்க டாலராக, அதாவது 58 சதவிகிதம்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31ஆக நிறைவு!

மும்பை: டிரம்பின் எச்1பி விசா கட்டண உயர்வு, இந்தியர்களின் பணப் பரிமாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31 ஆக நிறைவடைந்தது. வங்... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வால் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

மும்பை: எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொன... மேலும் பார்க்க