செய்திகள் :

``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்

post image

இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்த சக்ரவர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு விக்டோரியா இந்தியாவுக்கே வந்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் விக்டோரியா தன் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

விக்டோரியா
விக்டோரியா

அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ``ஆடை அலங்காரம், இந்திய உணவு வரை உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடுவது வரையிலான சிறிய மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியையும், உறவுகளையும் தந்திருக்கிறது.

குறிப்பான மூன்று மாற்றங்களை பட்டியலிடலாம். சேலை மெதுவாக என் அலமாரியின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சேலை இல்லாமல் ஒரு திருமணத்திலோ அல்லது பிற நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

பாரம்பரிய உணவை கைகளால் சாப்பிடுவது இப்போது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. கையால் சாப்பிடுவது உண்மையில் உணவுக்கு சுவை கூட்டுவதாக உணர்கிறேன்.

பண்டிகைகள் எனக்கு மிகவும் பிடித்த காலங்களில் ஒன்றாக மாறிவிட்டன. வண்ணங்கள், விளக்குகள், கொண்டாட்டங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கின்றன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்டோரியா
விக்டோரியா

மற்றொரு வீடியோவில், ``இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று பலர் கூறினர். ஆனால் எனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தேன்.

நான் இங்கு வந்தது மட்டுமல்லாமல், காதலித்தேன், திருமணம் செய்து கொண்டேன், ஒரு தொழிலை உருவாக்கினேன். மக்கள் உங்களைச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் இடத்திலிருந்து சிறந்த அத்தியாயங்களும் தொடங்கலாம். அதனால், தைரியத்துடன் உங்களை வழிநடத்துங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

VGP மரைன் கிங்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு கண்காட்சி

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது. இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மால... மேலும் பார்க்க

H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக்குப் போராடும் சோகம்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகில் இருக்கும் சிய்யாவரம் என்ற கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவ... மேலும் பார்க்க

மும்பை தாண்டியா நடனம்: 'பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிப்போம்' - VHPயின் கட்டுப்பாடுகளால் சர்ச்சை

நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நா... மேலும் பார்க்க

ஜப்பான்: தன் மகனை விட 6 வயது இளையவரை மணந்த 63 வயது பெண்; எப்படி மலர்ந்தது இந்தக் காதல்?

63 வயதான ஜப்பானியப் பெண் ஒருவர் தனது மகனை விட ஆறு வயது இளையவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அசராஷி என்ற அந்த 63 வயதான பெண்மணி, தனது 48 வயதில் விவாகரத்து பெற்று, தனது குழந்தையை ஒற்றைத் தாயாக வளர்த்து... மேலும் பார்க்க

ஆப்கான் சிறையில் பிரிட்டன் தம்பதி; ஐநா எச்சரிக்கை; கத்தார் பேச்சுவார்த்தை; விடுதலையான பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானில் சுமார் 8 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியினர், கத்தார் நாட்டின் முயற்சிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க