செய்திகள் :

"அமித்ஷாவின் வீடுதான் தற்போது அதிமுக தலைமை அலுவலகம்" - கனிமொழி எம்.பி கிண்டல்

post image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உடன்குடியில் நடைபெற்றது. 

இதில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி
கனிமொழி

அப்போது பேசிய அவர், “தமிழகத்தை தலை குனிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துள்ளோம். எதற்கு என்றால், கல்விக்கான நிதி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய எதையும் ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் இவர்களுடைய உரிமை, இவர்களுக்கு வர வேண்டிய நிதி உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

உலக நாடுகளைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, எந்த நாடுகளோடும் நல்லுறவு வைத்துக் கொள்ள முடியவில்லை. நேபாளம், சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நல்லுறவு இல்லாமல் இருந்து வருகிறார்.

உறுதியேற்பு
உறுதியேற்பு

அமெரிக்க அதிபர் வெற்றி பெற்ற போது இங்கே கொண்டாடினார்கள். ஆனால் தற்போது, இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய பொருட்கள் அனைத்திற்கும் 50 சதவீத வரியை விதித்துள்ள காரணத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருகிறார். ஆனால், மோடி இதுபோல் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

தமிழகத்திற்குத் துரோகம் செய்து வரும் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. தற்போது அ.தி.மு.க அலுவலகத்தையே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு மாற்றிவிட்டார். அமித்ஷாவின் வீடுதான் அ.தி.மு.கவின் அலுவலகமாக உள்ளது.

தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடிய மத்திய அரசு, தமிழர்களின் நாகரீகத்தையும் தொன்மையையும் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கலந்து கொண்டவர்கள்
கலந்து கொண்டவர்கள்

அந்த வகையில்தான், கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறது. 

தமிழகத்திற்குப் பல்வேறு துரோகங்களைத் தொடர்ந்து செய்து வரும் பா.ஜ.கவோடு கைகோர்த்து வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பகையாக இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை உணர்ந்து, வரும் தேர்தலில் நாம் விழிப்புணர்ச்சியுடன் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

``டிடிவி தினகரனைச் சந்தித்து ஆலோசித்தேன்" - அண்ணாமலை சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு கட்டமாகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை விவகாரங்கள் பொதுவெளிக்கு வ... மேலும் பார்க்க

காசா : உலக நாடுகளின் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான குரல் - உண்மையான அக்கறையா?

'காசா' இப்போது சர்வதேச அளவில் உச்சரிக்கப்படும் சொல். அக்டோபர் 7, 2022 அன்று தொடங்கிய போர் ஏறத்தாழ மூன்றாண்டை நெருங்கிவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்... மேலும் பார்க்க

பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?

நேற்று அமெரிக்கா நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்த பிறகு, இதுவே இவர்கள... மேலும் பார்க்க

கலைஞர் வீடு அருகே சல்வார் ஷோரூம் திறந்த முதல்வரின் சகோதரி; கலந்துகொண்ட பிரபலங்கள்

மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான செல்வி சென்னை கோபாலபுரத்தில் புதிதாக சல்வார் மற்றும் சேலைகளுக்கான பிரத்யேக ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.முதல்வர் ம... மேலும் பார்க்க

`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

* இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி * ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் * பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! * திமுக கூட்டத்த... மேலும் பார்க்க

திருவாரூர்: ``திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!

தி.மு.க சார்பில், திருவாரூர் தெற்கு வீதியில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. கடந்த 20ம் தேதி அதே இடத்தில் த.வெ.க தலைவ... மேலும் பார்க்க