செய்திகள் :

முக்கிய ஆலோசனை! முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்கியது.

இதில் திமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில், அவை அலுவல்களில் பல்வேறு விவகாரங்களை எழுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய நிதிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எதிர்வரும் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூழலில், திமுகவின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

The DMK MPs meeting, led by the Chief Minister, has begun and is underway.

ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியைப் பயன்படுத்தி ம... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!

மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு.மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... மேலும் பார்க்க

அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு

வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, வருகிற அக். 14 ஆம்... மேலும் பார்க்க

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்! அண்ணாமலை

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு க... மேலும் பார்க்க

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க