வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!
டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”டிடிவி தினகரன் 2024 முதல் எங்களுடன் பயணம் செய்கிறார். கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணத்தில் இருந்ததால், சென்னை வந்தவுடன் அவரை சந்தித்துப் பேசினேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தோம்.
டிடிவி தினகரனுடன் எனக்கும் பாஜகவுக்கும் நட்புறவு தொடர்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரது முடிவுக்கு காத்திருக்கிறோம். தேர்தல் களத்தின் சூடு வரும்போது, முடிவுகள் மாறும் என நம்புகிறேன்.
2024 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்களை நம்பி வந்தவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அரசியல் நிரந்தர எதிரிகள், நண்பர்கள் கிடையாது, கூட்டணிகள் மாறும்.”