செய்திகள் :

குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

post image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று(செப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும்.

அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக். 2 ஆம் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்காக இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், காப்பு அணியும் பக்தர்கள் வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினர்.

அக். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறர். தொடா்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.

அக். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தர்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர்.

பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், போலீஸார் பாதுகாப்பு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இதையும் படிக்க: அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

The Kulasekaranpattinam Mutharamman Temple dhasara festival began with the flag hoisting ceremony this morning (Sept. 23).

முக்கிய ஆலோசனை! முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ... மேலும் பார்க்க

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்! அண்ணாமலை

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு க... மேலும் பார்க்க

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

ரூ. 84,000-ஐ கடந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!

சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று(செப். 23) அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.நிகழாண்டு தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,652 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,849 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு ... மேலும் பார்க்க