செய்திகள் :

ஆப்கான் சிறையில் பிரிட்டன் தம்பதி; ஐநா எச்சரிக்கை; கத்தார் பேச்சுவார்த்தை; விடுதலையான பின்னணி என்ன?

post image

ஆப்கானிஸ்தானில் சுமார் 8 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியினர், கத்தார் நாட்டின் முயற்சிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வந்த பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பரா (76) ஆகியோர் அங்கு ஒரு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் சட்டங்களை மீறியதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல மாதங்களாக சிறையிலிருந்த அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

விடுவிக்கப்பட்ட தம்பதி
விடுவிக்கப்பட்ட தம்பதி

சிறையில் அவர்களது உடல்நிலையும் மனநிலையும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கத்தார் நாட்டின் முன்னெடுப்பில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த விடுதலை சாத்தியமாகியுள்ளது. விடுவிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக கத்தார் தலைநகர் தோகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குப் பல மாதங்களுக்குப் பிறகு தங்களது மகளைக் கண்டதும் அவர்கள் ஆனந்தக் கண்ணீரில் உணர்ச்சிவசப்பட்டனர்.

இந்த விடுதலையை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இதற்கு உதவிய கத்தார் நாட்டிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தம்பதியினர் விரைவில் லண்டன் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

மும்பை தாண்டியா நடனம்: 'பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிப்போம்' - VHPயின் கட்டுப்பாடுகளால் சர்ச்சை

நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நா... மேலும் பார்க்க

ஜப்பான்: தன் மகனை விட 6 வயது இளையவரை மணந்த 63 வயது பெண்; எப்படி மலர்ந்தது இந்தக் காதல்?

63 வயதான ஜப்பானியப் பெண் ஒருவர் தனது மகனை விட ஆறு வயது இளையவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அசராஷி என்ற அந்த 63 வயதான பெண்மணி, தனது 48 வயதில் விவாகரத்து பெற்று, தனது குழந்தையை ஒற்றைத் தாயாக வளர்த்து... மேலும் பார்க்க

"மின்சாரம் பயன்படுத்தி எப்படி வாழ்கிறீர்கள்?"- அதிசய மூதாட்டி எழுப்பிய கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஹேமா சென் (85). இவர் 1962 முதல் 2000-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை புனேவில் உள்ள அபாசாஹேப் கார்வாரே கல்லூரியில் தாவரவியல் பாடம் நடத்தி வந்தார். 'தாவரங்க... மேலும் பார்க்க

வகுப்பு மேசைகளில் 'ரோலர் கோஸ்டர்' பார்; வைரலாகும் சீனப் பள்ளிகளின் புகைப்படம் - பின்னணி என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்த... மேலும் பார்க்க

'எனக்கு 6க்கு 4தான் கிடைத்தது': 2 பூரி கேட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழுது போராட்டம் நடத்திய பெண்

பானிப்பூரி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மாலையாகிவிட்டால் அப்படியே கூட்டமாகச் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். குஜராத் மாநிலத்தில் 2 பானிப்பூரி குறைவாக... மேலும் பார்க்க

`டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்...'- கோவா சென்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்தது என்ன?

வெளியூர்களுக்கு பயணம் செய்து சுற்றுலா மேற்கொள்ளும் போது பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் பயணிகள் சந்திக்கின்றனர். அந்த வகையில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு க... மேலும் பார்க்க