செய்திகள் :

அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக்கொலை; இளைஞர் கைது

post image

அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற கொள்ளையரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், பெட்ரோல் பங்கை குஜராத்தைச் சேர்ந்த கிரண் படேல் (49) நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், செப். 16-ல் பெட்ரோல் பங்கில் நுழைந்த ஜேடன் மேக் ஹில் (21) என்பவர், கிரணிடம் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனிடையே, கிரண் படேலை ஜேடன் துப்பாக்கியால் சுட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜேடன் மீது ஒரு பாட்டிலை எறிந்துவிட்டு, கிரண் தப்பியோடினார். இருப்பினும், துப்பாக்கிச் சூடு காயத்தால் 20 அடி தொலைவிலேயே கீழே விழுந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஜேடன், மீண்டும் வந்து மயக்கநிலையில் இருந்த கிரணை இரண்டாவது முறை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்தபோதிலும் கிரண் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஜேடனை அடையாளம் கண்ட காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தெற்கு சர்ச் தெருவில் ஜேடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

Gujarati woman shot dead in South Carolina

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்

எச்-1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.அமெரிக்காவில் எச்1பி விசாவின் புதிய கட்டண அறிவிப்புக்கு அமெரிக்க நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்படும் ... மேலும் பார்க்க

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் நத்தாலி டி... மேலும் பார்க்க

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நூதன மோசடி: அமைச்சகம் எச்சரிக்கை!

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆள் கடத்தல் உள்ளிட்ட மோசடிகள் நடப்பதால் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! - இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பெல்ஜியம் தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள... மேலும் பார்க்க