செய்திகள் :

UP: "உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல" - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராகுல் பாபு. இவர் இரவில் எமர்ஜென்சி பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்நேரம் 4 போலீஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்தனர்.

அவர்கள் அத்துமீறி அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து அங்கு பணியிலிருந்த டாக்டர் ராகுலிடம் போலீஸ் சூப்பிரண்டண்ட் பிரிஜேஷ் குமாரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி போலீஸ் அதிகாரி வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், தான் எமர்ஜென்சி பிரிவில் பணியில் இருப்பதால் தன்னால் வர முடியாது என்று தெரிவித்தார்.

அதோடு அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவரை அழைத்துச்செல்லும்படி டாக்டர் ராகுல் கேட்டுக்கொண்டார்.

இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரிகள் டாக்டர் ராகுலிடம் கடுமையாகப் பேசி அவரைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து கடத்திச்செல்வது போன்று போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்படும் டாக்டர்
கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்படும் டாக்டர்

டாக்டர் அவர்களோடு செல்லவேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். இது குறித்து டாக்டர் ராகுல் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.

அதோடு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஒ.பி.டி பிரிவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் தங்களது மொபைல் போனை பிடுங்கி அத்துமீறி நடந்து கொண்டதாக டாக்டர் ராகுல் குற்றம் சாட்டி இருக்கிறார். இதனால் இரண்டு மணி நேரம் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டன. சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் வெளியில் காத்துக்கிடந்தனர்.

இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி பிரிஜேந்திர குமார் தலையிட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிபடுத்தினார். இது குறித்து டிஜிபிக்கு முறைப்படி புகார் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

டாக்டர்
டாக்டர்

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரிஜேஷ் கூறுகையில், ''எனக்கு இதில் எந்தவித தொடர்பும் கிடையாது. தனியார் டாக்டர் ஒருவரை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு பணியில் இருந்த டாக்டரை அழைத்து வந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: '100 சிம் கார்டுகள், ஆபாச மெசேஜ், பொது இடத்தில் பாலியல் தொல்லை' - இளைஞருக்கு போலீஸ் வலை

சிலர் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் வரக்கூடிய நட்பு கோரிக்கையை ஏற்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒ... மேலும் பார்க்க

ஆந்திரா: 6-ம் வகுப்பு மாணவி தலையில் எலும்பு முறிவு; இந்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு- என்ன நடந்தது?

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சாத்விகா நாகஸ்ரீ. இவரது தாய் விஜிதா அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிற... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மது போதையில் வந்த மகனை திட்டிய மருமகள்; தாக்கி காதை கடித்த மாமியார்... போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின்மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன் ப... மேலும் பார்க்க

சேலம்: முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி... மேலும் பார்க்க

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

கஞ்சா மிட்டாய் கடத்தல்நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச... மேலும் பார்க்க