செய்திகள் :

மும்பை: '100 சிம் கார்டுகள், ஆபாச மெசேஜ், பொது இடத்தில் பாலியல் தொல்லை' - இளைஞருக்கு போலீஸ் வலை

post image

சிலர் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் வரக்கூடிய நட்பு கோரிக்கையை ஏற்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருக்கும் அனீஷாவிற்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த செளரப் என்ற வாலிபருடன் சோசியல் மீடியா மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

ஆனால் அந்த நபர் அனீஷா காதலிப்பதாகச் சொன்னவுடன் அவருடனான தொடர்பை அனீஷா துண்டித்துக்கொண்டார். ஆனாலும் செளரப், அனீஷாவை விடவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

காதல் தொல்லை
காதல் தொல்லை

அடிக்கடி ஆபாச மெசேஜ் அனுப்புவது அல்லது அனீஷாவின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அங்கு அவரைப் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

அனீஷா அந்த நபரின் போன் நம்பரை பிளாக் செய்த பிறகும் வேறு வேறு சிம்கார்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் அனீஷா இயக்குநராக இருக்கும் நிதி நிறுவனத்தில் டிமெட் கணக்கு திறக்கவேண்டும் என்று கூறி செளரவ் வந்தார். அதில் ஏற்பட்ட நட்பு இந்த அளவுக்குச் சிக்கலைக் கொண்டு வந்தது. அனீஷா வெளிநாடு சென்றாலும் கூட செளரப் அவருக்கு மெசேஜ் மற்றும் வீடியோ அனுப்பி சித்ரவதை செய்து வந்தார்.

விமான நிலையம், ஹோட்டலுக்குச் சென்றால் கூட அதைக் கண்காணித்து அங்கு நேரில் வந்து அனீஷாவிற்கு செளரப் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரின் தொடர் தொல்லை பொறுக்கமுடியாமல் அனீஷா, அவருக்கு எதிராக மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செளரப் 100 சிம்கார்டுகளைப் பயன்படுத்தி மெசேஜ் மற்றும் வீடியோ அனுப்பி இருந்தார். அனீஷாவின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டெலகிராம் மற்றும் அவரது போன் சிக்னலைப் பயன்படுத்தி நேரில் சென்று தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

கால் மற்றும் வீடியோ கால் செய்தும் தொல்லை கொடுத்து வந்தார். சில நேரங்களில் நள்ளிரவில் கூட இது போன்ற ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

செளரப் எந்தெந்த நம்பரில் இருந்து மெசேஜ், கால், வீடியோ அனுப்பினார் என்ற விபரத்துடன் அனீஷா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செளரப்பைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆந்திரா: 6-ம் வகுப்பு மாணவி தலையில் எலும்பு முறிவு; இந்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு- என்ன நடந்தது?

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சாத்விகா நாகஸ்ரீ. இவரது தாய் விஜிதா அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிற... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மது போதையில் வந்த மகனை திட்டிய மருமகள்; தாக்கி காதை கடித்த மாமியார்... போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின்மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன் ப... மேலும் பார்க்க

சேலம்: முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி... மேலும் பார்க்க

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

கஞ்சா மிட்டாய் கடத்தல்நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச... மேலும் பார்க்க

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரி... மேலும் பார்க்க