செய்திகள் :

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

post image

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், இவருக்கும் பாஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த சரஞ்சித் சிங் கிரேவால் 74 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

அது காலப்போக்கில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு செய்திருக்கின்றனர்.

ருபிந்தர் கவுர் பாந்தர் - ரஞ்சித் சிங் கிரேவால்
ருபிந்தர் கவுர் பாந்தர் - ரஞ்சித் சிங் கிரேவால்

அதனால் ருபிந்தர் கவுர் பாந்தரை, ஜூலை 20-ம் தேதி சரஞ்சித் சிங் கிரேவால் இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்.

இதற்கிடையில், இந்தியா வந்த ருபிந்தர் கவுர் பாந்தரை அமெரிக்காவில் வசிக்கும் அவரின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

உடனே அவரின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தின் மூலம் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி லூதியானா காவல்துறை சந்தேக நபர்களின் பெயர்களை பட்டியலிட்டது.

அதில் ஒருவர் சரஞ்சித் சிங் கிரேவால். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் கூலி ஆட்களை வைத்து ருபிந்தர் கவுர் பாந்தரை கொலை செய்தது தெரியவந்தது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார... மேலும் பார்க்க

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல... மேலும் பார்க்க

ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருப... மேலும் பார்க்க

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்... மேலும் பார்க்க

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயு... மேலும் பார்க்க

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது... மேலும் பார்க்க