செய்திகள் :

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

post image

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது, ஜப்பான் பாதுகாப்புத் துறைக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

அதன் அடிப்படையில், அந்தக் குழுவை காவல்துறை விசாரித்திருக்கிறது. அவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்திருக்கிறது.

அப்போதுதான், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதும், வந்திருந்த குழுவினர், கால்பந்தாட்ட வீரர்கள் போல நடிக்கச் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

விமான நிலையம்
விமான நிலையம்

அதைத் தொடர்ந்து, அந்தக் குழுவை ஜப்பான் அரசு நாடு கடத்தியது. இது தொடர்பாக பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``பாகிஸ்தானின் 22 பேர் கொண்ட குழு, கால்பந்து அணியாக நடித்து சியால்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு சென்றிருக்கின்றனர்.

இருப்பினும், ஜப்பானிய அதிகாரிகள் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் அவர்களை நாடு கடத்தினர். முக்கிய சந்தேக நபராக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது குஜ்ரன்வாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலிக் வகாஸ் 'கோல்டன் ஃபுட்பால் ட்ரையல்' என்ற கால்பந்து கிளப்பைப் பதிவு செய்ததாகவும், அந்தக் குழுவின் வீரர்களைப் போல செயல்பட பயிற்சி அளித்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

ஆள்கடத்தல் விவகாரமாக இருக்கும் என சந்தேகிக்கும் விசாரணை அமைப்புகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயு... மேலும் பார்க்க

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திர... மேலும் பார்க்க

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக நகை, பணம் வாங்கி அதிகாரி ஏமாற்றிவிட்டார்: வேலை கேட்டு மனு அளித்த கைம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்கள... மேலும் பார்க்க