செய்திகள் :

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

post image

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திருமுருகன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு 16 வயது நர்சிங் மாணவி அரசு நகரப் பேருந்தில் பயணித்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணடித்து சைகை காட்டியுள்ளார். இதை நர்சிங் மாணவி நடத்துநரிடம் தெரிவித்தும், அதற்கு நடத்துநர் எதுவும் கேட்காததால் நடத்துநரும் உடந்தையாக இருந்ததாக உறவினர்களுக்கு போன் மூலம் மாணவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் ஆறு பேர் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் பேருந்தில் ஏறி நடத்துநரையும், ஓட்டுநரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சேலம் நகர பேருந்து நிலையம்
சேலம் நகர பேருந்து நிலையம்

குறிப்பாக பேருந்துக்குள் ஏறி காலால் எட்டி உதைத்துத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் தனபால், நடத்துநர் திருமுருகன் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கேட்க வந்த போலீசாரை மாணவியின் தாயார் தள்ளிவிட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், தன்னையும் தாக்கிவிட்டதாக மாணவியின் தாயார் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிப் பதிவுகளைக் கொண்டு சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாகத் தாக்குதல் நடத்திய ஆறுமுகம், பாலு என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக நகை, பணம் வாங்கி அதிகாரி ஏமாற்றிவிட்டார்: வேலை கேட்டு மனு அளித்த கைம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்கள... மேலும் பார்க்க

குன்னூர்: மலைச்சரிவில் சிசுவுடன் பரிதாபமாக இறந்து கிடந்த கர்ப்பிணி யானை! - என்ன சொல்கிறது வனத்துறை?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்... மேலும் பார்க்க

ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வ... மேலும் பார்க்க