செய்திகள் :

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

post image

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே, யூ டியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்ற பிறகே செயல்பட அனுமதிக்கும் நடைமுறையைக் கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தை திறந்துவைத்த பின்னர் பேசிய முதல்வர் சித்தராமையா,

"செய்தி சேனல்கள் தொடங்கவும் செய்திகளை ஒளிபரப்பவும் கண்டிப்பாக உரிமங்கள் தேவை. ஆனால், யூ டியூப் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் செய்திகளை ஒளிபரப்ப உரிமம் தேவையில்லை என்ற நிலை இருந்தது. தற்போது யூ டியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களும் செய்தி ஒளிபரப்ப உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுகுறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்" என்று கூறினார்.

மேலும், "மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான நடைமுறைகளில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு" என்றும் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.

முன்னதாக, யூ டியூப் சேனல்கள் ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதனால் மின்னணு ஊடகங்களுக்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக வேண்டும் என்று மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கம், முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளது.

Karnataka to explore licencing norms for private YouTube channels to check blackmail

இதையும் படிக்க | 3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க