செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

post image

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவ்வாறு நன்கொடையாகப் பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சில பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பொன்னி தென்காசி காவல்துறையில் புகார் செய்தார்.

காசி விஸ்வநாதர் கோயில்

அந்த புகாரில் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்கள் காணிக்கையாக அளித்த பித்தளை குடம், சில்வர் வாளி, கரண்டி, பிரசாத பை உள்ளிட்ட பொருட்கள் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் இருந்தன. 21.08.2025 அன்று இரவு 7 மணிக்கு மடப்பள்ளியில் சோதனை செய்தபோது அந்தப் பொருள்கள் அங்கு இல்லை .

கோயிலில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்தபோது அங்கிருந்து பொருட்களை 10.08.2025 காலை 6 மணிக்கு கோயிலில் தற்காலிகமாக அர்ச்சகராகப் பணிபுரியும் அருப்புக்கோட்டை நடன சபாபதி, பக்தர்கள் ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் பெரிய அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குகளில் இந்தப் பொருள்களை கோயிலின் தெற்குவாசல் வழியாக ஓர் ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

சங்கரன்கோவில்

இது குறித்து நடனசபாபதி மற்றும் ஹரி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோயிலில் முதன்மை அர்ச்சகராக உள்ள செந்தில் ஆறுமுகம் என்கிற செந்தில் பட்டர் வரச் சொன்னதால் அதை எடுத்து அர்ச்சகர் செந்தில் பட்டர் வீட்டிற்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ளனர்”.

கோயில் நிர்வாக அதிகாரி கொடுத்துள்ள புகாரின்படி கோயிலில் உள்ள 15 பித்தளை குடங்கள், 20 சில்வர் வாளிகள், 20 கரண்டிகள், இரண்டு பாக்ஸ் சால்வைகள், இரண்டு பாக்ஸ் பிரசாத பை ஆகியவை திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.95 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்காசி காவல்துறை ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பக்தர்களான ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பட்டர் மற்றும் நடனசபாபதி ஆகியோர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக நகை, பணம் வாங்கி அதிகாரி ஏமாற்றிவிட்டார்: வேலை கேட்டு மனு அளித்த கைம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்கள... மேலும் பார்க்க

குன்னூர்: மலைச்சரிவில் சிசுவுடன் பரிதாபமாக இறந்து கிடந்த கர்ப்பிணி யானை! - என்ன சொல்கிறது வனத்துறை?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்... மேலும் பார்க்க

ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வ... மேலும் பார்க்க

6 மாத கண்காணிப்பு; சிக்கிய அஸ்ஸாம் பெண் அதிகாரி: ரெய்டில் ரூ.2 கோடி தங்கம், பணம் பறிமுதல்!

அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் நுபுர் போரா. தற்போது சர்க்கிள் அதிகாரியாக இருக்கும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகா... மேலும் பார்க்க