செய்திகள் :

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

post image

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என வங்கிக் கணக்கில் அதிக பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது.

உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர். பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் 76 வயது ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், 3 நாள்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டுக்குப் பிறகு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மலக்பேட்டையில் உள்ள நாகார்ஜுனா மருத்துவமனையில் மூத்த தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பெண் மருத்துவரை, கடந்த செப். 5 ஆம் தேதி, சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி மோசடி கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. பெங்களூரு காவல்துறை லோகோ, காவல்துறை ஆவணங்களைக் காட்டி அவரை நம்ப வைத்துள்ளனர். அவரிடம் உள்ள பணத்தைத் தரவில்லை என்றால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி டிஜிட்டல் கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.

அவரும் கடந்த செப். 6 ஆம் தேதி தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிற்கு ரூ. 6.6 லட்சம் அனுப்பியுள்ளனர். ஆனாலும் மோசடி கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்யவே அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, வேறு ஒரு மொபைல் எண்ணிலிருந்தும் அவருக்கு அழைப்பு வரவே, அவர் தீவிர நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப். 8 அன்று இறந்தார்.

டிஜிட்டல் மோசடி கும்பல் காரணமாகவே அவர் இறந்ததாக செப். 9 ஆம் தேதி அதாவது அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகே காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவர் இறந்தபிறகும் அந்த கும்பல் தொடர்ந்து மருத்துவரின் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளதாகவும் போலீசார் கூறினர். இணையவழி மோசடியால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.

76 year old Hyderabad resident dies after 3 days of digital arrest

இதையும் படிக்க | நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க