செய்திகள் :

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாரைச் சித்திரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடந்த செப்.14 ஆம் தேதி பிகார் மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த விடியோவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மரணமடைந்த ஹீராபென் மோடி, மோடியின் கனவில் வந்து பேசுவதுபோலவும், தேர்தல்களில் வாக்குகளைப் பெற, தன்னைப் பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடியை அவர் விமர்சிப்பது போலவும் விடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

36 விநாடி கொண்ட அந்தக் காணொலியை பிகார் காங்கிரஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், இந்த விடியோ விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை எழுப்பியது.

இதுகுறித்து தில்லி பாஜக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் மீது தில்லி காவல் துறையால் வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விவகாரம் குறித்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பஜந்தாரி, பிரதமர் மோடியின் தாயார் குறித்த செய்யறிவு விடியோவை அனைத்துவிதமான சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், வேறு யாரும் இந்த விடியோவை பரப்பக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

'Remove AI video of PM Modi's mother', Patna high court tells Congress

இதையும் படிக்க... இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%... மேலும் பார்க்க

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க