செய்திகள் :

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

post image

ரயில்வே மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பாரா மெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்ளிடம் இருந்து செப்.18-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். : 03/2025

மொத்த காலியிடங்கள் : 434

பணி: Nursing Superintendent

காலியிடங்கள்: 272

தகுதி : General Nursing and Midwifery பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது Nursing பாடப்பிரிவில் இளநிலை பட்டப்ப டிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dialysis Technician

காலியிடங்கள்: 4

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Dialysis Technician இல் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Health & Malaria Inspector Gr. III

காலியிடங்கள்: 33

தகுதி: வேதியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று Health Inspector, Sanitary Inspector படிப்பில் ஒரு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Pharmacist

காலியிடங்கள்: 105

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Radiographer X-Ray Technician

காலியிடங்கள்: 4

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் X-Ray Technician, Radio diag-nosis Technology-இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 19 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ECG Technician

காலியிடங்கள்: 4

தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Cardiology, ECG Laboratory Technology, Cardiology Technician பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Laboratory Assistant Grade II

காலியிடங்கள்: 12

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் எம்எல்டி டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் பாரா மெடிக்கல் பணி தொடர்பான திறனறிவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் General Awareness, General Arithmetic, General Intelligence and Reasoning, General Science பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, திருநங்கை பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.9.2025

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

Applications are invited from eligible candidates for the following posts mentioned in the table below. Applications complete in allrespects must be submitted ONLINE ONLY

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள உதவி மருத்துவ அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:அறிவிப்பு எண். : 13/MRB/2025பணி: Assist... மேலும் பார்க்க

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி- இல் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். ICSR/PR/Advt.146/2025 பணி: Proje... மேலும் பார்க்க

நாள் ஒன்றுக்கு ரூ. 750 சம்பளத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசின... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 515 ஆர்ட்டிசன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த விர... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

குவகாத்தியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி... மேலும் பார்க்க