செய்திகள் :

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

post image

உச்ச நடிகராக இருக்கும்போதுதான் தானும் அரசியலுக்கு வந்ததாகவும் 1996ல் தனக்கும் மாபெரும் கூட்டம் கூடியதாகவும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சரத்குமார், தவெக விஜய் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, "கொள்கை, கோட்பாடு இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டும் கையில் எடுத்திருக்கிறார் விஜய். மக்களுக்கு நன்மை செய்வேன் என்று கூறுகிறார். ஆனால், என்ன செய்யப் போகிறார், புதுமையாக, புதிதாக எந்த திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார் என்று இதுவரை சொல்லவில்லை.

நாங்கள் ஆட்சியமைப்போம் என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கலாம். அதில் தவறு இல்லை. வார இறுதி நாள்களில் பிரசாரம் செய்கிறார். அதில் என்ன உத்தியைப் பயன்படுத்துகிறாரென்று தெரியவில்லை.

எல்லாருக்குமே கூட்டம் வரும். 1996ல் எனக்கும்தான் கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் சமூக வலைத்தளங்கள் கிடையாது. வேண்டுமானால் என்னிடம் உள்ள காணொளிக் காட்சிகளை போட்டு காண்பிக்கிறேன். மதுரையில் எனக்கு பெரிய கூட்டம் கூடியது.

நாட்டாமை, சூர்ய வம்சம் என ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்ச நடிகராகத்தான் அரசியலுக்கு வந்தேன். நிறைய கூட்டங்களை நான் பார்த்துவிட்டேன். பிரபலம் என்ற அடிப்படையில் கூட்டம் வரும். கொள்கைகள் மூலமாக மக்கள் ஈர்க்கப்பட்டு சிறப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை வரும்போதுதான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்.

Actor sarathkumar says that TVK Leader Vijay has no principles or ideology

இதையும் படிக்க | 3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூ... மேலும் பார்க்க

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் பேசும்போது கனிமொழி, கர்ஜனை மொழியாக மாறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள செயல் வீரர் செந்தில் பாலாஜி எனவும் அ... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ... மேலும் பார்க்க

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த 6 ப... மேலும் பார்க்க