செய்திகள் :

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

post image

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமாகிவிட்டதாகவும் அவருடைய குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் ஜாய் கிரிஸில்டா தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை சமூக ஊடகங்களில் ஜாய் கிரிஸில்டா பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார்.

இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவட் லிமிட்., நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்துக்கு 15 நாள்களில் ரூ. 12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வாதிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாய் கிரிஸில்டா தரப்பு, வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது என்றும் அவரைப் பாதுகாக்கவே மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மாதம்பட்டி தங்கவேலு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இரு வழக்குகளையும் சேர்த்து வருகின்ற செப். 24 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Madhampatti Rangaraj case against Joy Crizildaa

இதையும் படிக்க : மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த 6 ப... மேலும் பார்க்க

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது திருருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு ... மேலும் பார்க்க

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமல... மேலும் பார்க்க