செய்திகள் :

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

post image

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த 6 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் தாய் உள்பட 4 பேர் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து(28). டூவீலர் மெக்கானிக்கான இவரும் அதே பகுதியில் காலனித் தெருவைச் சேர்ந்த குமார் மகள் மாலினி(26) என்ற பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் மாலினியின் தாய் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மாலினியின் காதலுக்கு அவரது தாய் விஜயா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினரிடையே பிரச்னை நிலவி வந்துள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, வைரமுத்துவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக மாலினி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாலினியின் குடும்பத்தினர் அவரிடம் எழுத்துப்பூர்வமான உறுதியை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து மாலினி தனது உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாலினி பதிவுத் திருமணம் செய்வதற்கான சான்றிதழை எடுத்து வருவதற்காக திங்கள்கிழமை சென்னை சென்றார். அன்றிரவு பணிமுடிந்து வீடு திரும்பிய வைரமுத்துவை அடியமங்கலத்தில் மர்ம கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மாலினியின் தாய் விஜயா மாற்றுச் சமுதாயத்தைச் சேரந்தவர் என்பதால் அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைரமுத்து குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் உள்ளிட்ட அக்கட்சியினர், வைரமுத்துவின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் மாலினி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்துக்கு மேலாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து, நேற்று இரவில் கொட்டும் மழையிலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, மாலினியின் சகோதரர் குகன்(24), குகனின் நண்பர் அன்புநிதி(19), மாலினியின் சித்தப்பா பாஸ்கர்(42) உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 தனிப்படைகள் அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் 5 பேரை கைது செய்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வழக்கின் திடீர் திருப்பமாக புதன்கிழமை மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட விஜயா(45), குகன்(24), அன்புநிதி(19), பாஸ்கர்(42) ஆகிய 4 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, வைரமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Mayiladuthurai youth honor killing: 4 people including the woman mother jailed

இதையும் படிக்க | மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் ... மேலும் பார்க்க

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது திருருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு ... மேலும் பார்க்க

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமல... மேலும் பார்க்க

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தின... மேலும் பார்க்க