செய்திகள் :

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாவட்ட மகளிா் அதிகார மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மகளிா் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் 3 வருடம் தரவு மேலாண்மை, செயல் முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும். மேற்கண்ட கல்வித் தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூா் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாதம் ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.9.2025 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

VILLUPURAM DISTRICT HUB FOR EMPOWERMENT OF WOMEN APPLICATION REQUIRED FOR IT ASSISTANT FOR MISSION SHAKTI

நாள் ஒன்றுக்கு ரூ. 750 சம்பளத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 515 ஆர்ட்டிசன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த விர... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

குவகாத்தியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் வேலை: தட்டச்சு, சுருக்கெழுத்தர் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 30 தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு விளம்ப... மேலும் பார்க்க

கடலூர் மாவட்ட நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணிகளை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு கு... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை!

நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் உள்ள கார்பைட் வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விபரம் வருமாறு:பணி: Tenure Based CPWLகாலியிடங்கள்: ... மேலும் பார்க்க