செய்திகள் :

தெலங்கானாவில் மூத்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் சரண்!

post image

சிபிஐ மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பொதுலா பத்மாவதி தெலங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார்.

மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவ் என்கிற கிஷன்ஜியின் மனைவி பத்மாவதி (62) என்ற சுஜாதா சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு தன்னுடைய உடல்நலநம் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாகத் தெலங்கானா டிஜிபி ஜிதேந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த 43 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பத்மாவதி, தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் (சத்தீஸ்கர்) கீழ் உள்ள மாவோயிஸ்ட் தளங்களின் புரட்சிகர மக்கள் குழுக்களான ஜனதான சர்க்கார் இன் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

பத்மாவதியின் சரணடைதலுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார், ஆயுதங்களைக் கைவிட்டு வளர்ச்சிப் பாதையில் சேருமாறு மாவோயிஸ்ட்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தெலங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி, மத்திய குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க சிபிஐ (மாவோயிஸ்ட்) மாநிலக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றிய கிஷன்ஜியை மணந்தார்.

கிஷன்ஜி 2011இல் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்தார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPI (Maoist) Central Committee member Pothula Padmavati surrendered before the Telangana police here.

இதையும் படிக்க:இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி!

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க