செய்திகள் :

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

post image

திருச்சியில் விஜய் பிரசாரம்

திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல் பிரசார பயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தது.

ஆனால், அனுமதி வாங்கியிருந்த பத்தரை மணிக்கு அவரால் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்துக்கு வரமுடியவில்லை. காரணம், ஒன்பதரை மணிக்கே திருச்சி விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் அவர் வந்துவிட்டாலும், மரக்கடை பகுதிக்கு வந்துசேர அவருக்கு 2 மணிக்கு மேல் ஆனது.

அந்த அளவுக்கு இருபுறமும் கூடியிருந்த கூட்டம், அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு சரியான நேரத்துக்கு செல்லவிடவில்லை. கூட்ட நெரிசலில் பலரும் மயங்கினர்.

ஒருவழியாக மரக்கடை பகுதிக்கு கூட்டத்தை நீந்திக்கொண்டு வந்துசேந்த விஜய், மைக்கை பிடித்தபேச ஆரம்பிக்க மைக் மக்கர் செய்தது. அதன்பிறகு, 15 நிமிடங்கள் உரையாற்றிய அவர்,

vijay

`திருச்சில தொடங்கினா திருப்புமுனை'

"அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்கிறதுக்காக குலதெய்வ கோயிலுக்குப் போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்களாம்.

அந்த மாதிரி தேர்தலுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மக்களைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்திருக்கேன்.

ஒரு சில மண்ணைத் தொட்டா ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்கினா நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா... அது மாதிரி திருச்சில தொடங்கினா திருப்புமுனையா அமையும்.

அதற்கு உதாரணமாக அண்ணா அவர்கள் 1956-ல் தேர்தலில் நிற்க வேண்டும் என்று நினைத்தது திருச்சியில்தான்.

எம்ஜிஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்தியது திருச்சிதான். அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது.

பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம்.

கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாமல், உங்களைப் பார்க்கும்போது மனசுக்குள் ஒரு பரவசம், ஒரு எமோஷன்.

திமுக தேர்தல் வாக்குறுதி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 505 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில், எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்?

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?

கிட்னி திருட்டு

நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். தி.மு.க-வினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே? தி.மு.க-வைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

vijay

‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள்

பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்" என்று பேசி முடித்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்து அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பரப்புரைக்கு கிளம்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு

மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' - திருச்சியில் விஜய் பரப்புரை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக ... மேலும் பார்க்க

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க