செய்திகள் :

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

post image

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மணிப்பூர் மாநிலத்தில் மோதலால் சுரச்சந்பூரில் இடம்பெயர்ந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில்,

``தங்களின் கனவுகளை நனவாக்குவதற்கும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் அமைதியான பாதையில் செல்லுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இன்று, நான் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறேன். இந்திய அரசும் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறது’’ என்று தெரிவித்தார்.

மணிப்பூரில் பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இடம்பெயர்ந்தோரிடையேயும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இம்பாலில் பிரதமர் மோடி பேசுகையில்,

மணிப்பூரில் வன்முறை, நமது முன்னோர்களுக்கும், நமது அடுத்த தலைமுறையினருக்கும் இழைக்கப்படும் அநீதி. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உறுதிமொழியுடன் மணிப்பூரை நாம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மணிப்பூர் மக்களின் பங்களிப்பில் இருந்து நாம் ஊக்கம்பெற வேண்டும். மணிப்பூரில்தான் முதன்முதலில் தேசியக்கொடியை இந்திய ராணுவம் ஏற்றிவைத்தது.

முகாம்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

இடம்பெயர்ந்தவர்களுக்காக 7,000 புதிய வீடுகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, மணிப்பூருக்கு சுமார் ரூ. 3,000 கோடி சிறப்புத் தொகுப்பையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

‘I’m with you..’: Modi’s reassuring word to crisis-hit Manipur

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க