செய்திகள் :

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

post image

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூனில் பறக்க விரும்பி எம்.பி. சுதிர் குப்தாவுடன் ஏறினார். ஆனால் ​பலூனின் கீழ் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அதை அங்கிருந்த பாதுகாவலர்கள் அணைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மணிக்கு 20 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பலூன் பறக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது பேசிய முதல்வர், “காந்தி சாகர் ஒரு கடல் போன்றது. அது வளமான வனவிலங்குகளையும் இயற்கை பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது.

நான் இங்கே இரவு முழுவதும் தங்கி நீர் விளையாட்டுகளை ரசித்தேன். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சொர்க்கம். இங்கே எல்லாம் இருக்கும்போது ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? என்றார். முதலமைச்சர் தனது சுற்றுப்பயணத்தில், சம்பல் நீர்ப்பரப்பில் கப்பல் மற்றும் படகு சவாரியையும் அனுபவித்தார்.

Chief Minister Mohan Yadav's hot air balloon caught fire at Gandhisagar Forest Retreat in Mandsaur district.

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க