செய்திகள் :

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

post image

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) பலாமுவில் உள்ள நவாபஜாரில் இருந்து ஔரங்காபாத் நோக்கி அதிக அளவிளான வெளிநாட்டு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதே வேளையில் மெதினிநகர் - ஔரங்காபாத் சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது லாரியை தடுத்து நிறுத்தியதாக காவல் கண்காணிப்பாளர் ரீஷ்மா ரமேஸ்னா தெரிவித்தார்.

லாரி ஓட்டுநரிடம், இது குறித்து கேட்டபோது, ​​அது வெள்ளை சிமென்ட் என்றார். இதனையடுத்து சோதனைக்காக லாரி சத்தர்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வாகனத்தை சோதனை செய்தபோது, ​​லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 6,360 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிறகு ஓட்டுநரை கைது செய்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க: சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

Police in Jharkhand Palamu district seized foreign liquor worth Rs 12.72 lakh from a trailer truck, an officer said on Saturday.

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க