செய்திகள் :

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகமே.

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாற்றம், வாரிசுச் சான்று, சிட்டா அடங்கல், முதியோர் ஓய்வூதியம், அரசு வழங்கும் உதவித் தொகைகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் என அத்தியாவசியமான சேவைகள் அனைத்தும் வழங்கப்படும் இடம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகமே.

தினமும் ஏராளமான மக்கள் இவ்வலுவலகத்திற்கு வருகின்றனர். ஆனால், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் இன்று மோசமான நிலையில் இருப்பது உள்ளூர் மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்
செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

செண்டூர் விஏஓ அலுவலகம் பல ஆண்டுகளாக எந்த வகையான பராமரிப்பும் செய்யப்படாததால், தற்போது சிதிலமடைந்த தோற்றத்தில் உள்ளது. அலுவலகத்தின் முன்புறம், உள்பகுதிகள், மேல்மாடி அனைத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளிப்படுகின்றன. இடைவிடாமல் பெயர்ந்து விழும் சிமெண்ட் துகள்கள், அங்கு வரும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளன. அலுவலகத்தின் மேல்பகுதியில் பராமரிப்பின்றி செடிகள், கொடிகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. கதவுகள், சன்னல்கள் சிதைந்து, பெயரளவிலேயே காணப்படுவதால், அலுவலகத்தில் இருக்கும் முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

மக்கள் கவலை

இது குறித்து செண்டூர் கிராம மக்கள் கூறுகையில் “இந்த கட்டிடம் மிகவும் பழமையானது. உறுதித்தன்மையே கேள்விக்குறியாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து பெரிய விபத்து நடக்கக்கூடும். ஏற்கனவே சிமெண்ட் கலவை பெயர்ந்து கிராம மக்கள் மீது விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதை நினைத்தே நாங்கள் அலுவலகத்துக்கு வர அஞ்சுகிறோம்” என்று செண்டூர் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

அவர்கள் மேலும் கூறுகையில், “புதிதாக வந்த கிராம நிர்வாக அலுவலர் கூட, அலுவலகத்துக்குள் அமரத் தயங்குகிறார். அலுவலகம் முன்பாகவே ஒரு கீற்று கூரை அமைத்து, அங்கேதான் மக்களை சந்திக்கிறார். இதிலிருந்தே கட்டிடத்தின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது” எனக் கூறினர்.

செண்டூர் ஊராட்சித் தலைவர் கூறுகையில்:

“மக்கள் தினமும் அதிக அளவில் அலுவலகத்துக்கு வருகின்றனர். ஆனால், இவர்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தற்போதைய அலுவலகத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி, மக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

கிராம நிர்வாக அலுவலரின் விளக்கம்

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் தெரிவித்ததாவது: “இங்கு முன்பு பணியாற்றிய விஏஓ பல முறை இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். கலெக்டரும் புதிய அலுவலகம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்திருக்கிறார். விரைவில் புதிய அலுவலகம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்
செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மையமாக விளங்கும் விஏஓ அலுவலகத்தில், உயிரைப் பணயம் வைத்து சான்றிதழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.

பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடியாகச் செவிசாய்த்து, முதலில் தற்காலிக அலுவலகம் ஏற்படுத்தி, பின்னர் பாதுகாப்பான புதிய கட்டிடம் அமைத்துத் தர வேண்டியது மிகவும் அவசியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ந... மேலும் பார்க்க

TVK: விஜயின் முதல் பிரசாரம்; திருச்சியைத் தேர்ந்தெடுக்க பின்னணி என்ன? அரசியல் திருப்பம் தருமா?

கடந்த 2008 - ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக... மேலும் பார்க்க

TVK: திருச்சியில் விஜய் பிரசாரம் - காவல்துறை 23 கட்டுப்பாடுகள்; தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை

த.வெ.க தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக காவல்துறை 23 விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதே சமயம், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ... மேலும் பார்க்க

கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்கிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்க... மேலும் பார்க்க

``நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை'' - உச்ச நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்த... மேலும் பார்க்க