செய்திகள் :

TVK: விஜயின் முதல் பிரசாரம்; திருச்சியைத் தேர்ந்தெடுக்க பின்னணி என்ன? அரசியல் திருப்பம் தருமா?

post image

கடந்த 2008 - ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக்கிறார். இதற்கு முன்பு, விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் 2008-ம் ஆண்டு முதலே அரசியலுக்கான காய்களை நகர்த்தி வந்த நடிகர் விஜய், தற்போது த.வெ.க கட்சியை உருவாக்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் இறங்க இருக்கிறார்.

இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் இரண்டாம் மாநில மாநாடு நடத்தினார். இப்போது, தனது முதல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.

TVK Vijay | த.வெ.க - விஜய்
TVK Vijay | த.வெ.க - விஜய்

விஜய் தனது முதல் பிரசார நிகழ்வுக்குத் திருச்சியைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகிறார்கள்:

  • 1920-ல் திருச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

  • 1956-ல் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் திருச்சியில் தி.மு.க மாநாடு நடந்தது. அப்போது அண்ணா தலைமையில் “தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா” என்ற முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பின்னரே தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைந்து இன்று ஆட்சிக்கட்டிலில் உள்ளது.

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கே மாற்ற நினைத்தார். அதற்காக திருச்சியில் ஒரு பங்களாவையும் வாங்கினார். இன்றும் அந்த பங்களா அ.தி.மு.க கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

  • 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வெற்றிபெற்றார். “ஸ்ரீரங்கம்தான் எனக்குப் பூர்வீகம்” என்று அவர் பெருமையுடன் கூறியிருந்தார்.

இந்த வரிசையில், ‘திருச்சி சென்டிமென்ட்’-ஐ விஜயும் தனது அரசியல் பயணத்தில் பயன்படுத்த விரும்புகிறார். அதனால் தான், திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு, திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

விஜய்

இந்நிலையில், “வந்தாரை தேர்தலில் ஜெயிக்க வைக்கும் ஊர் திருச்சி” என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை த.வெ.க தொண்டர்கள் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் தலைவர்களுக்கு திருப்பம் தந்த திருச்சி, இந்த முறை விஜய்க்கும் அரசியல் திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ந... மேலும் பார்க்க

TVK: திருச்சியில் விஜய் பிரசாரம் - காவல்துறை 23 கட்டுப்பாடுகள்; தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை

த.வெ.க தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக காவல்துறை 23 விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதே சமயம், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ... மேலும் பார்க்க

கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்கிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்க... மேலும் பார்க்க

``நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை'' - உச்ச நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்த... மேலும் பார்க்க