செய்திகள் :

`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்

post image

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு டெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா
சி.பி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா

எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த ஜெகதீப் தன்கர், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்து முடியும் வரை அதாவது கடந்த இரண்டு மாதமாகப் பொதுவெளியில் வரவில்லை.

அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் ரகசியமாகவே இருந்தது. இது தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

இந்த நிலையில்தான், அவர் சி.பி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

ஜெகதீப் தன்கர் - Jagdeep Dhankhar
ஜெகதீப் தன்கர் - Jagdeep Dhankhar

இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார். வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சானி போன்ற முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர், வெங்கையா நாயுடுவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

ஜெகதீப் தன்கர், ``பொது வாழ்வில் சிபி ராதாகிருஷ்ணனின் பரந்த அனுபவத்தால், துணை குடியரசுத் தலைவர் பதவி பெரும் மரியாதையையும் புகழையும் அடையும்." எனவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க

Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு

மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' - திருச்சியில் விஜய் பரப்புரை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக ... மேலும் பார்க்க

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க