செய்திகள் :

Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு

post image

மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "மணிப்பூர் மக்களுக்கு வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வடகிழக்கில் பொலிவை ஏற்படுத்தும்.

தைரியம் மற்றும் துணிச்சலுக்கு பெயர் பெற்ற இடம் தான் மணிப்பூர். மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன், இது என் வாக்குறுதி.

மணிப்பூரை வன்முறை பாதித்ததில் எனக்கு வருத்தம். விரைவில் மணிப்பூரில் புதிய விடியல் மலரும். அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்.

மணிப்பூரின் வளர்ச்சி பாதையை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மணிப்பூரில் ரயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. புதிய திட்டங்கள் மணிப்பூர் மக்களின் வாழ்வை மேம்படுத்தும்” என்று பேசி இருக்கிறார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' - திருச்சியில் விஜய் பரப்புரை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக ... மேலும் பார்க்க

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க