செய்திகள் :

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

post image

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கோவை

பாலத்துறை பைபாஸ் அருகே தொடங்கி பல்லடம், சூலூர், அன்னூர், மத்தம்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் அமைக்க திட்டமிட்டு, நில அளவீட்டுப் பணிகளை தொடங்கிவிட்டனர்.

இதன் காரணமாக சுமார் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

நிலம் அளவீடு பணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், “மொத்தம் 81 கி.மீ நீளத்தில் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதை முழுவதும் பசுமை நிலங்களை வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை எந்த விதத்திலும் பொதுமக்களுக்குப் பயனில்லை.

ஏற்கெனவே திருச்சி, மதுரை, சேலம், சென்னை, அவிநாசி ஆகிய இடங்களில் இருந்து வரும் மக்கள் காரணம்பேட்டை – கருமத்தம்பட்டி – அன்னூர் வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு கோவை நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனவே புதிய புறவழிச் சாலை தேவையற்றது.

எடப்பாடி பழனிசாமியிடம் மனு

இந்தத் திட்டம் உழவர்களின் நிலத்தை அழித்து, சில பெரிய முதலாளிகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மட்டும் நன்மை தருகிறது.

பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்களின் போராட்டம் தீவிரமடையும்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க

Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு

மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' - திருச்சியில் விஜய் பரப்புரை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக ... மேலும் பார்க்க

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க