செய்திகள் :

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

post image

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற வாசகத்துடன் பரப்புரையைத் தொடங்கி 100 நாள்கள் கடந்துவிட்டது.

இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் பா.ம.க-வின் அன்புமணி 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற வாசகத்துடன் பரப்புரை தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது.

திமுக-வின் இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தன் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார்.

தவெக விஜய் திருச்சி
தவெக விஜய் திருச்சி

அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தன் பரப்புரை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பரந்தூர் மக்களையும், மாணவர்களைப் பாராட்டும் நிகழ்விலும், இரண்டு மாநாடுகளில் மட்டுமே மக்களைச் சந்தித்தவர் தற்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களைச் சந்திப்பதாகப் பரப்புரைத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் இன்று திருச்சிக்கு காலை 10:15 மணியளவில் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறினார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக தொண்டர்கள் குழுமியிருந்தனர்.

தவெக தலைவர் விஜய் வரும் வாகனத்தின் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருக்கின்றனர். 10:35 மணியிலிருந்து 11:30 வரை மட்டுமே பரப்புரையில் பேச வேண்டும் எனக் காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், தவெக தலைவர் இன்னும் கூட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த மரக்கடைக்கு வந்து சேரவில்லை.

தற்போதுவரை டிவிஎஸ் டோல்கேட்டைக் கடந்திருக்கும் விஜய், இன்னும் ஏறத்தாழ 3 கி.மீ கடக்க வேண்டியிருக்கிறது.

தவெக விஜய் திருச்சி
தவெக விஜய் திருச்சி

வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்யை சந்தித்து வருகின்றனர்.

அதே போல விஜய் பேசவிருக்கும் மரக்கடையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இதுவரை ஒருவர் மயக்கமடைந்த நிலையில், காவல்துறையினர் தொண்டர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பரப்புரையால் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்த ஜெகதீப் தன்கர்' - ஆச்சர்யத்தில் எம்.பி.க்கள்

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ந... மேலும் பார்க்க

TVK: விஜயின் முதல் பிரசாரம்; திருச்சியைத் தேர்ந்தெடுக்க பின்னணி என்ன? அரசியல் திருப்பம் தருமா?

கடந்த 2008 - ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக... மேலும் பார்க்க

TVK: திருச்சியில் விஜய் பிரசாரம் - காவல்துறை 23 கட்டுப்பாடுகள்; தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை

த.வெ.க தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக காவல்துறை 23 விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதே சமயம், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ... மேலும் பார்க்க

கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்கிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்க... மேலும் பார்க்க

``நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை'' - உச்ச நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்த... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போராட்டக்காரர்கள்

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளத் தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் முன் அடிபணிந்த பிரதமர் கே.பி. சர்மா ஒலி கடந்த செவ்வாயன்று பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்.அதையடுத்... மேலும் பார்க்க