செய்திகள் :

இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!

post image

கொச்சி: கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் இறந்த இளைஞரின் இதயம், 13 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

அறுவைசிகிச்சை நடக்கும் கொச்சி தனியார் மருத்துவமனைக்கு, சிறுமி, கொல்லத்திலிருந்து வந்தே பாரத் ரயிலில் அழைத்து வரப்பட்டுள்ளார்.

மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பில்ஜித், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர்.

இதையடுத்து, இதய நோயால் பாதித்து மாற்று இதயத்துக்காகக் காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு இதயம் சாலை வழியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, 1.25 மணிக்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சைத் தொடங்கி 3.30 மணிக்கு முடிந்தது. முழு அறுவை சிகிச்சை நடைமுறைகளும் முடிய சனிக்கிழமை காலை 6 மணி வரை ஆனதாகவும், சிறுமியின் உடலுக்குள் பொருத்தப்பட்ட இதயம் துடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த 48 மணி நேரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

The heart transplantation surgery of a 13-year-old girl, who was rushed to Kochi from Kollam on the Vande Bharat Express train, was successfully completed at a private hospital here on Saturday, hospital authorities said.

இதையும் படிக்க... 46 நாடுகளுக்குச் சென்றவருக்கு மணிப்பூர் வர நேரமில்லை: பிரதமர் பயணம் குறித்து கார்கே

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க