செய்திகள் :

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

post image

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ரோன் போலீஸாரால் மீட்கப்பட்டது. ட்ரோன் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்து அனுப்பப்பட்டதா அல்லது திருமண விழா போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டதாக என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர், 740 கிமீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் 240 கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையையும் கொண்டுள்ளது.

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

இங்கு சர்வதேச எல்லையை பிஎஸ்எஃப்பும், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை ராணுவமும் பாதுகாக்கிறது. எல்லையைத் தாண்டி அனுப்பப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, ட்ரோனை நடுவானில் கண்காணித்து அழிக்க சர்வதேச எல்லையில் சிறப்பு ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பிஎஸ்எஃப் நிறுத்தியுள்ளது.

இந்த கருவிகளை பிஎஸ்எஃப் பயன்படுத்திய பிறகு, சர்வதேச எல்லையின் குறுக்கே அனுப்பப்படும் ட்ரோன்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

The police in Jammu and Kashmir's Jammu district said on Saturday that it has recovered a drone from a village near the Line of Control (LoC) in Akhnoor sector, officials said.

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க