செய்திகள் :

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

post image

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.

மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ. 71,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

இதுதொடர்பாக ஒடிசா முதலவர் மோகன் சரண் மாஜியின் எக்ஸ் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை கண்டு வருகிறது. பிரதமரின் 5 மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்றாகும்.

திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுவது உள்ளடக்கிய விக்சித் பாரத் மீதான உறுதியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இந்த முயற்சிகள் உள்கட்டமைப்பை அதிகரிக்கும், இணைப்பை வலுப்படுததும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை திறப்பு விழாவுடன் மிசோரம் முதல் முறையாக இந்திய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இது வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று மைல்கல், தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பின் அடையாளமாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா வலிமையானது, ஆத்மநிர்பர் வளமானது என்ற தொலைநோக்குப் பார்வையை நெருங்கிறது என்று அவர் கூறினார்.

Odisha Chief Minister Mohan Charan Majhi on Saturday said Prime Minister Narendra Modi's five-state visit to Mizoram, Manipur, Assam, West Bengal and Bihar is "a testament to the scale and speed of progress across the nation.

இதையும் படிக்க: எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!

மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.மணிப்பூரில் இனமோதல்கள் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமரின் உருவப்படத்தை பரிசளித்த சிறுமி!

மணிப்பூரின் சுரசந்த்பூருக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அவரின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளார். மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்... மேலும் பார்க்க

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம்... மேலும் பார்க்க

இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!

கொச்சி: கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் இறந்த இளைஞரின் இதயம், 13 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை நடக்கும் கொச்சி தனியார் மருத்துவமனைக்கு, சிறுமி, கொல்லத்திலிருந்து வந்தே... மேலும் பார்க்க