செய்திகள் :

இந்தியா மீதான வரி விதிப்பு மோதலை ஏற்படுத்துகிறது! - டிரம்ப்

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போரை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததுடன் இந்தியா மீது அதிகபட்ச(50%) வரியை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி பற்றி டிரம்ப்பும் அதிபர் டிரம்ப் பற்றி மோடியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான முதற்கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நவம்பர் இறுதியில் முடிவுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீதான வரி விதிப்பு பற்றி பேசுகையில்,

"இந்தியா, ரஷியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தேன். இது இந்தியாவுடனான நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. இது நம்முடைய பிரச்னை என்பதைவிட ஐரோப்பாவின் பிரச்னை என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

வங்கிகளுக்கு எதிரான தடைகள், வரி விதிப்பினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. நான் ஏற்கனவே நிறைய அதைச் செய்துவிட்டேன்.

நான் இந்தியா - பாகிஸ்தான் உள்பட இதுவரை 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன். சில தீர்க்க முடியாத போர்களை நிறுத்திய என்னால் ரஷியா - உக்ரைன் போரை தீர்க்க முடியவில்லை.

பல நாடுகளின் வரி விதிப்புகளின் மூலமாக நாங்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறோம் (போரை நிறுத்தியிருக்கிறோம்). எங்களைப் பயன்படுத்திக் கொண்ட பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வரி விதிப்பு எங்களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது. அதுமட்டுமன்றி நாட்டிற்கு கோடிக்கணக்கான வருவாயை கொண்டுவந்தது. வரி விதிப்பு தொடர்பாக எங்கள் மீதான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது எங்களை ஒரு பணக்கார நாடாக மாற்றியுள்ளது" என்று பேசியுள்ளார்.

Trump says tariffs on India caused rift, admits he could not solve Russia-Ukraine war

அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?

அமெரிக்க அமைச்சரவை கொண்டு வந்திருக்கும் ஹையர் என்ற சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தியிருப்பதாகவும் ஆனால் ரஷியா - உக்ரைன் இடையேயான போரை மட்டும் இதுவரை தீர்க்க முடியவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயா... மேலும் பார்க்க

உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

அண்மைக் காலமாக உலகம் முழுவதும், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என இயற்கை தன்னுடைய கோர முகத்தை அவ்வப்போது காட்டி வருகிறது.அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நேரிட்ட நிலநடுக்கத்தில் இரண்டா... மேலும் பார்க்க

நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

நேபாளத்தில், திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் போராட்டம், கலவரமாக மாறி தலைநகர் காத்மாண்டு புரட்டிப்போடப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் விடியோக்கள் வெளியாகியு... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவின் ... மேலும் பார்க்க

ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா!

உலகிலேயே முதல் முறையாக, அல்பேனியா நாட்டில், செய்யறிவு பெண் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர், நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கப் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனிதனால் உருவாக்... மேலும் பார்க்க