செய்திகள் :

பிரதமர்களின் மரபு இதுவல்ல; மோடி முன்பே மணிப்பூர் சென்றிருக்க வேண்டும்! - பிரியங்கா காந்தி

post image

மணிப்பூரில் வன்முறை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி அங்கு செல்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமரிசித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி,

"2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகவும் முன்பாகவே மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு இவ்வளவு நாள்களாக அசாதாரண சூழல் நிலவ அனுமதிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இவ்வளவு நாள் பிரதமர் மோடி அங்கு செல்லாமல் இருந்து, அங்கு பலர் கொல்லப்படவும் வன்முறை நடக்கவும் அனுமதித்துள்ளார். இந்திய பிரதமர்களின் வழக்கம் அப்படி இருந்ததில்லை. பிரதமர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எங்கு பிரச்னை, துயரம் என்றாலும் அவர்கள் செல்வார்கள். சுதந்திரம் பெற்றதில் இருந்து பிரதமர்கள் அவ்வாறுதான் செய்திருக்கிறார்கள், அதுதான் பாரம்பரியமும்கூட. ஆனால் பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூருக்குச் செல்கிறார். அவர் முன்பே இதைப் பற்றி யோசித்து சென்றிருக்க வேண்டும்" என்று கூறினார்.

பிரதமரின் பயணம்

மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13 முதல் 15 வரை) மூன்று நாள்கள் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளகிறார்.

இன்று காலை மிஸோரம் என்ற அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து அவர் மணிப்பூர் செல்லவிருக்கிறார். இதனால் அவரை வரவேற்கவும் பாதுகாப்புக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இன மோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை முதல் முறையாக பயணிக்கவுள்ளாா். இன மோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

பிரதமா் மோடி மணிப்பூருக்கு பயணித்து, கள நிலவரத்தை அறிய வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தற்போது மணிப்பூருக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.

Priyanka Gandhi comments on PM Modi visiting Manipur after 2 years

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம்... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய... மேலும் பார்க்க

இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!

கொச்சி: கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் இறந்த இளைஞரின் இதயம், 13 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை நடக்கும் கொச்சி தனியார் மருத்துவமனைக்கு, சிறுமி, கொல்லத்திலிருந்து வந்தே... மேலும் பார்க்க

46 நாடுகளுக்குச் சென்றவருக்கு மணிப்பூர் வர நேரமில்லை: பிரதமர் பயணம் குறித்து கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது ஒரு மோசடி நாடகம். வன்முறையால் காயம்பட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரதமர் ந... மேலும் பார்க்க