செய்திகள் :

மதுரை: போன் செய்து வரச் சொன்ன கணவர் கொலை; பார்க்கச் சென்ற இடத்தில் அதிர்ந்த மனைவி!

post image

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், முனிச்சாலைப் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர்.

ராஜ்குமார் நேற்று இரவு தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு டூவீலரில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது மனைவி சந்திரகலாவிற்கு போன் செய்து, 'கடைக்கு செல்ல வேண்டும், பிரதான சாலைக்கு வா' என்று கூறியுள்ளார்.

MURDER

சந்திரகலா வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்ல வெளியில் வந்துள்ளார். அப்போது தெருவிளக்குகள் எரியாமல் வீட்டின் அருகிலயே கணவரின் டூவிலர் நிற்பதை கண்டு அருகில் சென்றுபார்த்தபோது ராஜ்குமார் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சந்திரகலா தனது உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

கூடல்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மர்ம நபர்கள் சிலர் ராஜ்குமாரை வாளால் சரமாரியாக வெட்டியதோடு நெஞ்சில் குத்தி கொலை செய்துவிட்டு வாளை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் தெருவிளக்குகள் எரியாத நிலையில் சிசிடிவி காட்சிகளும் தெளிவாக பதிவாகவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். என்ன காரணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்று பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் மதுரை கூடல் நகர்ப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்

பாலிவுட் நடிகை திஷா பதானிபாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப... மேலும் பார்க்க

சருமத்தில் ஒவ்வாமை; உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்; ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணமா?

நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க -வைச் சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூ... மேலும் பார்க்க

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செ... மேலும் பார்க்க

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்... மேலும் பார்க்க