செய்திகள் :

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

post image

ஹிமாசலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பலி எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாசல் மாநிலம் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது. தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 574 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. 389 விநியோக மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து 333 நீர் வழங்கல் திட்டங்கள் செயலிழந்துள்ளன.

ஜூன் 20 முதல் இந்தாண்டு பருவமழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் திடீர் வெள்ளம் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் 218 பேரும், சாலை விபத்துகளில் 168 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக குலு 174 சாலைகளும், மண்டியில் 166 சாலைகளும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிம்லா மாவட்டத்தில் 48 சாலைகள், காங்க்ராவில் 45, சம்பாவில் 44 மற்றும் சிர்மௌரில் 28 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை -03 (மனாலி-கீலாங்), தேசிய நெடுஞ்சாலை -305 (அன்னி-ஜலோரி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-503A (உனா பகுதி) உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உயரமான பள்ளத்தாக்குகள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கான இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுப்பணித் துறை, மாநில மின்சார வாரியம், ஜல் சக்தித் துறை ஆகிய குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தொடர்ச்சியான மழை மற்றும் புதிய நிலச்சரிவுகள் சீரமைப்பு பணிகளுக்கு இடையூரை விளைவித்து வருகின்றன.

செப்டம்பர் கடைசி வாரம் வரை பருவமழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Himachal Pradesh continues to reel under the impact of an unforgiving monsoon, with the State Disaster Management Authority (SDMA) on Saturday confirming massive disruption to public utilities across the state.

இதையும் படிக்க: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மூத்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் சரண்!

சிபிஐ மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பொதுலா பத்மாவதி தெலங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார். மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவ் என்கிற கிஷன்ஜியின் மனைவி பத்மாவதி (62) என்ற சுஜாதா சி... மேலும் பார்க்க