செய்திகள் :

மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்

post image

உடல்நலக் குறைவு காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் வெள்ளிக்கிழமை காலமானார்.

மூத்த அரசியல் தலைவரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான டி.டி. லபாங்(93) நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவர், காலமானபோது முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான வின்சென்ட் எச். பாலா மருத்துவமனையில் உடன் இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வருக்கு திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூருக்கு மோடி வருகை: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

1972ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழைந்த அவர், நான்கு முறை வடகிழக்கு மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராக இருந்த டி.டி. லபாங், பின்னர் 2018ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Veteran politician and four-time Meghalaya Chief Minister Donwa Dethwelson Lapang, fondly known as 'Maheh', died in a hospital here, his family said.

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு ... மேலும் பார்க்க

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள... மேலும் பார்க்க

ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ர... மேலும் பார்க்க

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க