செய்திகள் :

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

post image

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பழங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (என்எச்44) கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது. கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்தது.

இந்த நிலையில், இந்த தடை இன்று நீக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் கூறினார்.

கனரக வாகனங்களின் இயக்கம் தொடர்பான போக்குவரத்து ஆலோசனையைப் பின்பற்றி, நெடுஞ்சாலையில் முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் இடைவிடாத மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நெடுஞ்சாலை பெரும் சேதத்தைச் சந்தித்தது, இதனால் முக்கிய சாலைகள் மூடப்பட்டது.

The Srinagar-Jammu national highway was thrown open for heavy vehicles on Wednesday after three weeks, clearing the way for hundreds of fruit-laden trucks to proceed towards their destinations across the country.

இதையும் படிக்க: ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் ... மேலும் பார்க்க

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃ... மேலும் பார்க்க